தொழில்நுட்பம்
ரியல்மி நார்சோ

ரியல்மியின் நார்சோ ஸ்மார்ட்போன் சீரிஸ் விரைவில் இந்தியாவில் அறிமுகம்

Published On 2020-03-19 09:21 GMT   |   Update On 2020-03-19 09:21 GMT
ரியல்மி பிராண்டு நார்சோ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.



ரியல்மி பிராண்டு விரைவில் நார்சோ ஸ்மார்ட்போன் சீரிசை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதனை ரியல்மி புதிய டீசர்களின் மூலம் தெரிவித்து இருக்கிறது.



புதிய நார்சோ சீரிஸ் அதிக சக்திவாய்ந்ததாக இருக்கும் என்றும் இது ஜெனரேஷன் இசட் பிரிவுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு வருவதாக ரியல்மி தெரிவித்துள்ளது. ஏற்கனவே ரியல்மி பிராண்டு ப்ரோ சீரிஸ், எக்ஸ் சீரிஸ், சி சீரிஸ், யு சீரிஸ் உள்ளிட்டவற்றில் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வருகிறது.

இதுவரை ஆங்கில எழுத்துக்களை தழிவியே ஸ்மார்ட்போன் சீரிஸ் இருந்து வரும் நிலையில், புதிய சீரிஸ் பெயர் வித்தியாசமாக இருக்கிறது. தற்போதைய டீசர்களின் படி புதிய ஸ்மார்ட்போன்கள் வெவ்வேறு நிறங்களில் வெளியாகும் என தெரிகிறது.

Tags:    

Similar News