செய்திகள்
கோப்புபடம்.

தாராபுரம் அருகே குடிநீர் தொட்டியில் விஷம் கலப்பு - போலீசில் பரபரப்பு புகார்

Published On 2021-10-22 08:01 GMT   |   Update On 2021-10-22 08:01 GMT
விஷமிகளின் செயலால் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய இயலாத நிலை உள்ளது.
தாராபுரம்:

குடிநீர் தொட்டியில் விஷம் கலந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகா சின்னக்கம்பாளையம் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் சுந்தரம் அலங்கியம் போலீசில் புகார் அளித்துள்ளார். 

அந்தப் புகாரில் கூறியுள்ளதாவது:-

சின்னக்கம்பாளையம் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வார்டு எண் 13 காங்கயம்பாளையம் நாடார் காலனியில்  பொதுமக்கள் குடிநீருக்காக பயன்படுத்தும் சின்டெக்ஸ் தொட்டியில் விஷமிகளால் தேவையில்லாத பொருள் கலக்கப்பட்டுள்ளது. 

இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விஷமிகளின் இத்தகைய செயலால் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய இயலாத நிலை உள்ளது. எனவே இச்செயலில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து அலங்கியம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  
Tags:    

Similar News