செய்திகள்
மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்

கீழ்பென்னாத்தூரில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்

Published On 2021-05-01 11:54 GMT   |   Update On 2021-05-01 11:54 GMT
கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
கீழ்பென்னாத்தூர்:

கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்தினர். மாற்றுத்திறனாளிகள் சங்க கீழ்பென்னாத்தூர் தாலுகா செயலாளர் பாக்கியராஜ் தலைமை தாங்கினார்.

அப்போது மாவட்ட செயலாளர் செல்வம், மாநில துணை தலைவர் சண்முகம் ஆகியோர் பேசுகையில், கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் 9 ஊராட்சிகளில் கொரோனா காலத்தை முன்னிட்டு 100 நாள் வேலையை தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், வெள்ளை நிற அடையாள அட்டையை நீல நிற அடையாள அட்டையாக மாற்றிவழங்க வேண்டும், ஒன்றியத்தைச் சேர்ந்த கொளத்தூர், செவரபூண்டி ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த ஊராட்சி செயலாளர்கள் மாற்றுத்திறனாளிகளை தரக்குறைவாக பேசி வருவதை கண்டிக்க வேண்டும் என்றனர். பி்ன்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் கோஷமிட்டனர்.

அதைத்தொடர்ந்து சங்க நிர்வாகிகள் ஆணையாளர் பழனியை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினர். அனைத்து கோரிக்கைகள் மீதும் நடவடிக்கை எடுப்பதாக ஆணையாளர் பழனி உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News