ஆட்டோமொபைல்
ஆட்டோவை வாடகைக்கு எடுத்துக் கொள்ளும் புதிய வசதியை உபெர் அறிமுகம் செய்து இருக்கிறது.
உபெர் நிறுவனம் ஆட்டோ ரென்ட்டல்ஸ் எனும் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது. இதை கொண்டு பயனர்கள் ஆட்டோக்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். இந்த சேவையில் ஒரு மணி நேரத்திற்கு ரூ. 149 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பத்து கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும்.
புதிய சேவையை கொண்டு அடிக்கடி தனி ரைடுகளை முன்பதிவு செய்து பயணிக்கும் இன்னலை போக்குகிறது. இதை கொண்டு பலமணி நேரங்களுக்கு பேக்கேஜ்களை முன்பதிவு செய்யலாம். அதிகபட்சமாக எட்டு மணி நேரத்திற்கு ஆட்டோக்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம்.
முதற்கட்டமாக இந்த சேவை சென்னை, பெங்களூரு, ஐதராபாத், பூனே, மும்பை மற்றும் டெல்லி என ஆறு நகரங்களில் துவங்கப்பட்டு இருக்கிறது. விரைவில் இதற்கு கிடைக்கும் வரவேற்பை வைத்து மற்ற நகரங்களுக்கும் நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆட்டோ ரென்ட்டல்ஸ் சேவையை பயன்படுத்த முதலில் செயலியை அப்டேட் அல்லது புது வெர்ஷனை டவுன்லோட் செய்ய வேண்டும். உபெர் செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் இயங்குதளங்களில் ஆப் ஸ்டோர் மற்றும் பிளே ஸ்டோர்களில் கிடைக்கிறது.