செய்திகள்
கோப்புபடம்.

காங்கயம் அருகே ரேக்ளா பந்தயம்

Published On 2021-10-18 09:28 GMT   |   Update On 2021-10-18 09:28 GMT
வெற்றி பெற்ற ரேக்ளா காளைகளின் உரிமையாளர்களுக்கு கோப்பைகள், பரிசுகள் வழங்கப்பட்டன.
காங்கயம்:

காங்கயம் தாலுகா, ஊதியூரை அடுத்துள்ள எல்லப்பாளையம்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட கவுண்டம்பாளையத்தில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. 

இதில் 200 மீட்டர், 300 மீட்டர் ஆகிய பிரிவுகளில் 200 - க்கும் மேற்பட்ட வண்டிகள் பங்கேற்றன. போட்டியை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதில் காங்கயம், குண்டடம், தாராபுரம், பொள்ளாச்சி, திருப்பூர், உடுமலை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 200 - க்கும் மேற்பட்ட வண்டிகள் கலந்து கொண்டன. 

வெற்றி பெற்ற ரேக்ளா காளைகளின் உரிமையாளர்களுக்கு கோப்பைகள், பரிசுகள் வழங்கப்பட்டன.  
Tags:    

Similar News