ஆன்மிகம்
பாப்பாவூர் தர்கா கந்தூரி விழா

பாப்பாவூர் தர்கா கந்தூரி விழாவையொட்டி சந்தனம் பூசும் நிகழ்ச்சி

Published On 2020-09-11 04:17 GMT   |   Update On 2020-09-11 04:17 GMT
நாகையை அடுத்த பாப்பாவூரில் உள்ள ஹலரத் செய்யதினா ஹாஜா ஷெய்ஹூ அலாவுதீன் தர்காவின் 416-வது ஆண்டு கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நாகையை அடுத்த பாப்பாவூரில் உள்ள ஹலரத் செய்யதினா ஹாஜா ஷெய்ஹூ அலாவுதீன் தர்காவின் 416-வது ஆண்டு கந்தூரி விழா கடந்த 30-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு ஆண்டவர் சமாதியில் சந்தனம் பூசப்பட்டது. நிகழ்ச்சியில் அனைத்து மதத்தினரும் சமூக இடைவெளியை கடைபிடித்தும், முக கவசம் அணிந்தும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News