ஆன்மிகம்
மார்கழி மாதத்தையொட்டி திருப்பதியில் சுப்ரபாத சேவைகள் ரத்து
vதிருப்பதி கோவிலில் வருகிற 17-ந்தேதி முதல் சுப்ரபாத சேவை ரத்து செய்து 12 ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் தாயார் எழுதிய திருப்பாவை ஜீயர்கள் முன்னிலையில் பாடப்பட்டு சாமியை துயில் எழுப்பப்பட உள்ளது.
திருமலை :
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்கழி மாதம் முழுவதும் ஆண்டாள் திருப்பாவை பாசுரத்துடன் ஏழுமலையானை துதி எழுப்பும் நிகழ்ச்சி நடைபெறும்.
வைணவ திருத்தலங்களில் மார்கழி 1-ந்தேதி முதல் அம்மாதம் முழுவதும் சுப்ரபாத சேவை ரத்து செய்து ஆண்டாள் திருப்பாவை பாசுரம் பாடியபடி சாமியை துயில் எழுப்பக்கூடிய பூஜைகள் நடைபெறும்.
இந்நிலையில் வருகின்ற 16-ந்தேதி காலை 6.4 மணியளவில் மார்கழி மாதம் தொடங்குவதால் திருப்பதி கோவிலில் வருகிற 17-ந்தேதி முதல் சுப்ரபாத சேவை ரத்து செய்து 12 ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் தாயார் எழுதிய திருப்பாவை ஜீயர்கள் முன்னிலையில் பாடப்பட்டு சாமியை துயில் எழுப்பப்பட உள்ளது.
ஜனவரி 14-ந்தேதி வரை திருப்பாவை சேவை நடைபெறும். மீண்டும் வழக்கம் போல ஜனவரி 15-ந்தேதி முதல் சுப்ரபாத சேவையுடன் ஏழுமலையான் கோவிலில் துயில் எழுப்படும்.
மார்கழி மாதத்தில் கிருஷ்ணருக்கும் ஏகாந்த சேவை பூஜைகள் செய்யப்படும்.
இவ்வாறு தேவஸ்தானம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.