ஆன்மிகம்
தூக்கணாம்பாக்கம் அய்யா வைகுண்டசாமி கோவிலில் சிறப்பு வழிபாடு

தூக்கணாம்பாக்கம் அய்யா வைகுண்டசாமி கோவிலில் சிறப்பு வழிபாடு

Published On 2020-12-21 05:50 GMT   |   Update On 2020-12-21 05:50 GMT
தூக்கணாம்பாக்கம் அய்யா வைகுண்டசாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.இதில் கடலூர், புதுச்சேரி மற்றும் விழுப்புரம் பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டனர்.
கடலூர் அருகே உள்ள தூக்கணாம்பாக்கம் பள்ளிப்பட்டில் ஸ்ரீமன் நாராயணசாமி நிழல்தாங்கல் என்ற பெயரில் அய்யா வைகுண்டசாமி கோவில் உள்ளது. இங்கு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு அன்னதானம் நடைபெற்று வருகிறது. அதிலும் தமிழ்மாதம் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமை மிகவும் விசேஷம் ஆகும். அந்த வகையில் மார்கழி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி நேற்று அய்யா வைகுண்டருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதை முன்னிட்டு காலை 6 மணிக்கு உகப்படிப்பு நடைபெற்றது. பின்னர் பகல் 12 மணியளவில் அலங்காரம் மற்றும் உச்சிப்படிப்பும் தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது. பின்னர் மாலை 6 மணிக்கு உகப்படிப்பு நடைபெற்றது. இதில் கடலூர், புதுச்சேரி மற்றும் விழுப்புரம் பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News