ஆன்மிகம்
சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா

சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா

Published On 2021-02-01 08:49 GMT   |   Update On 2021-02-01 08:49 GMT
மதுரை பாலமேட்டில் குலால குல உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது.
மதுரை பாலமேட்டில் குலால குல உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி முதல் 2 நாட்கள் யாக சாலை பூஜைகள் நடந்தன.

தொடர்ந்து 3-வது நாள் யாக சாலை பூஜையை தொடர்ந்து பல்வேறு புனித தீர்த்த குடங்கள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோபுர உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள், மேளதாளம் முழங்க புனித தீர்த்தம் கலசத்தில் ஊற்றப்பட்டது.

விழாவில் சுற்று வட்டாரம், வெளி மாவட்டப் பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பூஜை மலர்களும், புனித தீர்த்தமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News