செய்திகள்
மத்திகிரி அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திகிரி:
ஓசூர் சூடுகொண்டப்பள்ளியை சேர்ந்தவர் ஜெயராம் (வயது 29). கூலித் தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் அவர் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த ஜெயராம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மத்திகிரி போலீசார்விசாரணை நடத்தி வருகிறார்கள்.