உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

ரோடுகளில் சுற்றித் திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்

Published On 2022-01-12 09:21 GMT   |   Update On 2022-01-12 09:21 GMT
ராணிப்பேட்டையில் ரோடுகளில் சுற்றித் திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.
ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை முத்துக்கடை, கிருஷ்ணகிரி சாலை, காரை கூட்ரோடு, எம்.எப் சாலை உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் மாடுகள் சாலைகளில் சுற்றித் திரிகின்றன. இதனால் வாகன விபத்துக்கள் அதிக அளவில் ஏற்படுகிறது.

இந்நிலையில் நேற்று ராணிப்பேட்டை நகராட்சி ஆணையாளர் ஏகராஜன் உத்தரவின்படி நகராட்சி தூய்மைப்பணி அலுவலர் ரகீம், நகராட்சி ஆய்வாளர் தேவிபாலா, மேற்பார்வையாளர்கள் உமாசங்கர், கோவிந்தசாமி மற்றும் பணியாளர்கள் நகரில் சுற்றித் திரிந்த மாடுகளை பிடித்து நகராட்சி அலுவலகத்தில் கட்டி வைத்தனர். 

இது குறித்து தகவல் அறிந்த மாடுகளின் உரிமையாளர்கள் நகராட்சி அலுவலகம் வந்தனர். பின்னர் மாட்டின் உரிமையா ளர்கள் ஒவ்வொரு வருக்கும் மாட்டுக்கு ரூ.1000 செலுத்தி மாடுகளை மீட்டு சென்றனர். 

மேலும் மீண்டும் சாலைகளில் மாடுகளை விட்டால் மாடுகள் பறிமுதல் செய்யப்படும் என்று நகராட்சி அலுவலர்கள் எச்சரித்து அனுப்பினர்.
Tags:    

Similar News