உள்ளூர் செய்திகள்
கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
கோவில் கேட்டை தாண்டி சென்ற மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
காங்கேயம்:
காங்கேயம் அடுத்துள்ள பொங்கலூர் கருங்காலிப்பாளையத்தில் அமைந்துள்ளது கருப்பராயன்சாமி கோவில். நேற்று வழக்கம் கோவிலி பூசாரி இரவு பூசை முடித்து கோவிலை சாத்திவிட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில் இரவு கோவில் கேட்டை தாண்டி சென்ற மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
இது குறித்து அந்த ஊர் பொதுமக்கள் மற்றும் பூசாரி அளித்த புகாரின் பேரில் அவிநாசிப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.