உள்ளூர் செய்திகள்
திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

திசையன்விளை அருகே முத்தாரம்மன் கோவில் கொடைவிழா

Published On 2022-05-04 10:49 GMT   |   Update On 2022-05-04 10:49 GMT
திசையன்விளை அருகே உள்ள நாடார் அச்சம்பாடு முத்தாரம்மன் கோவில் கொடைவிழா 2 நாட்கள் நடந்தது.
திசையன்விளை:

திசையன்விளை அருகே உள்ள நாடார் அச்சம்பாடு முத்தாரம்மன் கோவில் கொடைவிழா 2 நாட்கள் நடந்தது.

விழா நாட்களில் செல்வ சக்திவினாயகர் கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம், கும்பாபிஷேகம், சிறப்பு பூஜை, நையாண்டி மேளம், சிறப்பு திருவிளக்குபூஜை,

வில்லிசை, மஞ்சள் பெட்டி ஊர்வலம், சுவாமி மஞ்சள் நீராடுதல் சுவாமி வீதி உலா, சிறப்பு அலங்கார பூஜை, அர்த்தசாம பூஜை, சிறப்பு அன்னதானம், பிரசாதம் வழங்குதல் உள்பட பல்வேறு நிகழ்சிகள் நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News