செய்திகள்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு அறுவை சிகிச்சை
இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு இன்று கண்புரை அறுவை சிகிச்சை நடைபெற்றதாக, அவரது பத்திரிகை செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு கண்புரை அறுவை சிகிச்சை நடைபெற்றதாகவும், அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்து, அவர் வீடு திரும்பியதாகவும் ஜனாதிபதிக்கான பத்திரிகை செயலாளர் அஜய்குமார் சிங் தெரிவித்துள்ளார்.