இந்தியா
மின்னல்

அசாமில் சோகம் - மின்னல் தாக்கி 8 பேர் பலி

Published On 2022-04-16 12:42 GMT   |   Update On 2022-04-16 12:42 GMT
அசாமில் பெய்த மழையால் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன என பேரிடர் மீட்புக்குழு தெரிவித்துள்ளது.
கவுகாத்தி:

வடகிழக்கு மாநிலங்களான சிக்கிம், அருணாசல பிரதேசம், அசாம், மேகாலயா, நாகாலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் என இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இதில், அருணாசல பிரதேசம், அசாம், மேகாலயாவில் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   

இந்நிலையில், அசாம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மின்னல் தாக்கியதில் 2 சிறார்கள் உள்பட 8 பேர் பரிதாபமாக பலியாகினர். 

திப்ருகர் மாவட்டத்தில் 4 பேரும், பர்பேட்டா மாவட்டத்தில் 3 பேரும், கோல்பாரா மாவட்டத்தில் ஒருவர் என மொத்தம் 8 பேர் பலியாகினர் என பேரிடர் மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.
Tags:    

Similar News