தொழில்நுட்பம்
பிளாக்ஷிப் பிராசஸருடன் குறைந்த விலையில் உருவாகும் ரெட்மி ஸ்மார்ட்போன்
சியோமி நிறுவனம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் கொண்ட குறைந்த விலை ரெட்மி ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சியோமி நிறுவனம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் கொண்ட புது ரெட்மி ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக இதே பிராசஸர் கொண்ட எம்ஐ11 ஸ்மார்ட்போனை சீன சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.
தற்சமயம் சியோமி எம்11 ஸ்மார்ட்போனை தொடர்ந்து எம்ஐ 11 ப்ரோ ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் இதுவரை முழுமையாக வெளியாகவில்லை.
ஸ்னாப்டிராகன் 888 பிராசஸருடன் உருவாகும் ஸ்மார்ட்போன் ரெட்மி கே40 ப்ரோ என அழைக்கப்படலாம் என கூறப்படுகிறது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 700 சீரிஸ் பிராசஸர் கொண்டு இயங்கும் ஸ்மார்ட்போன் ரெட்மி கே40 எனும் பெயரில் அறிமுகமாகும் என தெரிகிறது.
புதிய ரெட்மி கே40 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் தவிர, அதிக ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, AMOLED பேனல், 50 எம்பி சோனி IMX786 சென்சார், பன்ச் ஹோல் செல்பி கேமரா வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட சியோமி எம்ஐ 11 பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் வழங்கப்பட்டு இருந்தது. இத்துடன் வளைந்த எட்ஜ் டிஸ்ப்ளே, 2K AMOLED பேனல், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது. இத்துடன் 108 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.