செய்திகள்
தொழிலாளியிடம் பணம் கேட்டு மிரட்டல்: லாரி கிளீனர் கைது
தூத்துக்குடி அருகே தொழிலாளியிடம் பணம் கேட்டு மிரட்டிய லாரி கிளீனரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியை சேர்ந்தவர் மாரிசெல்வம் (வயது 20). கூலித் தொழிலாளி. இவர் திருச்செந்தூர் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த லாரி கிளீனரான தூத்துக்குடி பெரியசாமி நகரை சேர்ந்த இட்லி மணி என்ற மணிகண்டன் (33) என்பவர், மாரிசெல்வத்தை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டினாராம்.
இதுகுறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.