தொழில்நுட்பச் செய்திகள்
பி.எஸ்.என்.எல்

பி.எஸ்.என்.எல் குறித்து மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் செய்தி!

Published On 2022-03-26 06:04 GMT   |   Update On 2022-03-26 06:04 GMT
தற்போது செல்போன் பயன்படுத்தும் 10.15 சதவீதம் பேர் பி.எஸ்.என்.எல் சேவை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இறுதியில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை அமல்படுத்தப்படும் என தகவல் தொடர்பு மந்திரி தேவுசின் சவுகான் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச எம்.பி குன்வார் ரேவதி ராமன் சிங், மாநிலங்களவை கேள்வி நேரத்தின்போது இந்தியாவில் பி.எஸ்.என்.எல் 4ஜி சேவை எப்போது வழங்கப்படும் என கேள்வி எழுப்பினார். இதற்கு தேவுசின் சவுகான் இந்த ஆண்டுக்குள் வழங்கப்படும் என பதிலளித்துள்ளார்.

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் போட்டியிட்டு வரும் பி.எஸ்.என்.எல் இழப்பை சந்தித்து வருகிறது. இதை சரி செய்வதற்காக மத்திய அரசு பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் ஆகியவற்றை இணைக்க முடிவெடுத்துள்ளது. தற்போது இந்தியாவில் 10.15 சதவீதம் வாடிக்கையாளர்களை பி.எஸ்.என்.எல் வைத்துள்ளது.

இன்னும் வாடிக்கையாளர்களை விரிவு செய்யும் வகையில் 4ஜி சேவை கொண்டுவரப்படவுள்ளது.

மேலும் இந்த ஆண்டு இறுத்திக்குள் 5ஜி சேவையும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் எனவும் மந்திரி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News