செய்திகள்
சிறுமி பாலியல் பலாத்காரம்- வாலிபர் கைது
தூத்துக்குடியில் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி:
மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ரஹமத்துல்லா. இவருடைய மகன் அப்சல்கான் (வயது 32). இவர் தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்வதாகவும் ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில், தாளமுத்துநகர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அப்சல்கானை கைது செய்தனர்.