செய்திகள்
முககவசம் அணியாததை தட்டிக்கேட்ட அரசு பஸ் கண்டக்டர் மீது தாக்குதல்-வாலிபர் கைது
ஆத்திரமடைந்த கார்த்திக்குமார், கண்டக்டரை தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
குடிமங்கலம்:
குடிமங்கலத்தை அடுத்த இலுப்பநகரம் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் கார்த்திக்குமார்.இவர் பெதப்பம்பட்டியில் இருந்து அரசு பஸ்சில் ஏறினார். முககவசம் அணியாததால் அவரை கண்டக்டர் பஸ்சில் ஏற்றி செல்ல அனுமதி மறுத்து விட்டார்.
இதனால் கார்த்திக்குமாருக்கும், கண்டக்டருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதில் ஆத்திரமடைந்த கார்த்திக்குமார், கண்டக்டரை தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கண்டக்டர் அளித்த புகாரின் பேரில் குடிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி கார்த்திக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.