உள்ளூர் செய்திகள்
முனைவர் குமரி அனந்தனுக்கு ‘காமராஜர் விருது’- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
விருது பெறுபவர்களுக்கு விருதுத் தொகையாக ரூபாய் 1 லட்சம் பணமும், 1 சவரன் தங்கப்பதக்கம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழ்நாடு அரசால் ஒவ்வொரு ஆண்டும் அய்யன் திருவள்ளுவர் விருதும், பெருந்தலைவர் காமராஜர் விருதும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான அய்யன் திருவள்ளுவர் விருது மு. மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கும், 2021-ம் ஆண்டுக்கான பெருந்தலைவர் காமராஜர் விருது முனைவர் குமரி அனந்தனுக்கும் வழங்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
விருது பெறும் விருதாளர்களர்களுக்கு விருதுத் தொகையாக ரூபாய் 1 லட்சம் பணமும், 1 சவரன் தங்கப்பதக்கம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விருது பெறுபவர்களுக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.