செய்திகள்
சிவகாசி அருகே சாலை விபத்தில் பெண் பலி
சிவகாசி அருகே சாலை விபத்தில் பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி:
சிவகாசி சிவன் கோவில் நந்தவனம் தெருவை சேர்ந்தவர் மீனா (வயது 41). இவரும் இவரது உறவினருமான பராசக்தி காலனியை சேர்ந்த ஈஸ்வரி (65) என்பவரும் இருசக்கர வாகனத்தில் பழைய விருதுநகர் ரோட்டில் சென்று கொண்டு இருந்தனர். வாகனத்தை மீனா ஓட்டி வந்தார். அப்போது இந்த வாகனத்தை பின்தொடர்ந்து வந்த சக்திவேல் (30) என்பவர் ஓட்டி வந்த சரக்கு வாகனம் இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் ஈஸ்வரி படுகாயமடைந்து இறந்தார். இந்த விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.