செய்திகள்
கைது

கரூர் அருகே பிக்பாக்கெட் அடித்தவர் கைது

Published On 2021-02-27 13:30 GMT   |   Update On 2021-02-27 13:30 GMT
கரூர் அருகே பிக்பாக்கெட் அடித்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:

கரூர் தாந்தோணிமலை பகுதிக்குட்பட்ட தெற்கு தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 44). இவர் நேற்று முன்தினம் தாந்தோணிமலையில் உள்ள ஒரு கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தர்மபுரி மாவட்டம் கம்பயநல்லூரை சேர்ந்த பிரபு (36) என்பவர், சீனிவாசனின் பாக்கெட்டிலிருந்து பணத்தை திருடி உள்ளார். இதுகுறித்து சீனிவாசன் தாந்தோணிமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணத்தை பிக்பாக்கெட் அடித்த பிரபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News