உள்ளூர் செய்திகள்
75 சதவீத கட்டண உயர்வு - பவர் டேபிள் உரிமையாளர்கள் எதிர்பார்ப்பு
அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு நடைமுறையிலிருந்து 75 சதவீதம் பவர்டேபிள் கட்டண உயர்வு பெற வேண்டும்.
திருப்பூர்,:
திருப்பூர் பவர்டேபிள் உரிமையாளர் சங்க செயற்குழு கூட்டம், லட்சுமிநகரில் உள்ள சங்க அரங்கில் நடந்தது. சங்க தலைவர் நாகராஜ் தலைமை வகித்தார். செயலாளர் நந்தகோபால், உதவி செயலாளர் முருகேசன், பொருளாளர் சுந்தரம், துணை தலைவர் பொன்சங்கர் உட்பட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் ’சைமா’ சங்கம் - பவர்டேபிள் சங்கம் இடையே கடந்த ஆகஸ்ட் 2-ந் தேதி டஜனுக்கு ரூ.6 கட்டண உயர்வு நிர்ணயித்து இடைக்கால ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. புதிய ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு ‘சைமா’ சங்கம், பவர்டேபிள் சங்கத்துக்கு உடனடியாக அழைப்பு விடுக்க வேண்டும்.
மூலப்பொருட்கள் விலை, தொழிலாளர் சம்பளம் உயர்ந்துள்ளன. அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு நடைமுறையிலிருந்து 75 சதவீதம் பவர்டேபிள் கட்டண உயர்வு பெற வேண்டும். இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.