செய்திகள்
தடுப்பு சுவரில் மோதி நிற்கும் கார்.

திருமங்கலத்தில் தடுப்பு சுவரில் கார் மோதியது: எல்லை பாதுகாப்பு படை வீரர்-நண்பர் காயம்

Published On 2021-04-08 09:52 GMT   |   Update On 2021-04-08 09:52 GMT
திருமங்கலத்தில் இன்று அதிகாலை தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரர் மற்றும் அவரது நண்பரும் பலத்த காயம் அடைந்தனர்.

திருமங்கலம்:

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டியை சேர்ந்தவர் கோபி (வயது 40). எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரியும் இவர் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

இவரும் நண்பர் கணேசன் என்பவரும் சொந்த வேலை காரணமாக காரில் திருமங்கலம் வந்திருந்தனர். காரை கோபி ஓட்டி வந்தார். இன்று அதிகாலை 2 மணி அளவில் திருமங்கலத்தில் இருந்து ஆலம்பட்டிக்கு அவரகள்சென்று கொண்டிருந்தனர்.

கார் திருமங்கலம் தெற்கு தெரு அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் பயங்கரமாக மோதியது. இதில் கோபி மற்றும் கணேசன் பலத்த காயம் அடைந்தனர்.

இதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக திருமங்கலம் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதையடுத்து டி.எஸ்.பி. வினோதினி மற்றும் திருமங்கலம் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News