செய்திகள்
விபத்து பலி

போச்சம்பள்ளி அருகே விபத்தில் தொழிலாளி பலி

Published On 2020-10-17 07:48 GMT   |   Update On 2020-10-17 07:48 GMT
போச்சம்பள்ளி அருகே விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பட்டணம்:

போச்சம்பள்ளி தாலுகா மேட்டுபுலியூரை சேர்ந்தவர் மாது (வயது 55). கூலித்தொழிலாளி. இவர் மொபட்டில் ஊத்தங்கரை-புலியூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் மொபட் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த மாதுவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மாது இறந்தார். இதுகுறித்து பாரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News