செய்திகள்
கொலை

பட்டாகத்தியால் சமையல்காரர் வெட்டிக்கொலை

Published On 2021-01-13 03:01 GMT   |   Update On 2021-01-13 03:01 GMT
காஞ்சிபுரம் அருகே பட்டாகத்தியால் சமையல்காரர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம்:

காஞ்சிபுரத்தை அடுத்த களக்காட்டூர் காந்தி ரோட்டை சேர்ந்தவர் அருள். இவரது மகன் லிங்கமூர்த்தி (வயது 32). சமையல்காரராக வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் இவர் களக்காடூரில் உள்ள அரசு தோட்டக்கலை எதிரே நேற்று முன்தினம் இரவு நின்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் சிலர் அவரை பட்டாகத்தியால் சரமாரியாக வெட்டினர்.

அவரது அலறல் சத்தம் கேட்டதும் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த லிங்கமூர்த்தியை அங்கு இருந்தவர்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர், பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா, காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை செய்தனர்.

இது குறித்து மேலும் வழக்குப்பதிவு செய்து, இந்த கொலை முன் விரோதத்தில் நடந்ததா? வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News