செய்திகள்
திட்டக்குடி பகுதியில் நாளை மின் நிறுத்தம்
திட்டக்குடி கோட்டத்திற்குட்பட்ட கொட்டாரம், பெண்ணாடம், தொழுதூர், அடரி ஆகிய துணை மின் நிலைய பகுதியான ஆதமங்கலம், புவனூர், லட்சுமணாபுரம், ஏந்தல் உயர் மின்பாதைகளில் நாளை (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
திட்டக்குடி:
திட்டக்குடி கோட்டத்திற்குட்பட்ட கொட்டாரம், பெண்ணாடம், தொழுதூர், அடரி ஆகிய துணை மின் நிலைய பகுதியான ஆதமங்கலம், புவனூர், லட்சுமணாபுரம், ஏந்தல் உயர் மின்பாதைகளில் நாளை (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை ஆதமங்கலம், வையங்குடி, நாவலூர், நிதிநத்தம், ஏ.அகரம், செங்கமேடு, சாத்தநத்தம், முருகன்குடி, துறையூர், கிளிமங்கலம், கணபதிகுறிச்சி, கே.கே.சேரி, பெலாந்துறை, லஷ்மணாபுரம், கீழகல்பூண்டி, மேலகல்பூண்டி, வடகராம்பூண்டி, கொரக்கைவாடி, ஆலத்தூர், அடரி, அ.களத்தூர், ஜா.ஏந்தல், அசகளத்தூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும். மேற்கண்ட தகவலை திட்டக்குடி மின்வாரிய செயற்பொறியாளர் சிவகுரு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.