செய்திகள்
வழக்கு பதிவு

போக்குவரத்து விதிகளை மீறிய 371 பேர் மீது வழக்கு

Published On 2021-02-20 15:34 GMT   |   Update On 2021-02-20 15:34 GMT
ராமநாதபுரம் பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறிய 371 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் பகுதியில் போலீசார் நேற்று முன்தினம் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் போக்குவரத்து மற்றும் சாலை விதிகளை மீறியவர்கள் மீது வழக்குபதிவு செய்து அபராதம் வசூலிக்கப்பட்டது. இவ்வாறு செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டிச்சென்ற 10 பேர் மீதும், தலைக்கவசம் அணியாமல் சென்ற 157 பேர் மீதும், தலைக்கவசம் அணியாமல் பின்னால் அமர்ந்து சென்ற 71 பேர் மீதும், சீட்பெல்ட் அணியாமல் சென்றதாக 4 மீதும், இதர பிரிவுகளின் கீழ் 129 பேர் மீதும் என மொத்தம் 371 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவர்களிடம் இருந்து அபராதமாக ரூ.64 ஆயிரத்து 100 வசூலிக்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News