செய்திகள்
மாணவி பலி

பாப்பிரெட்டிப்பட்டி அருகே மர்ம காய்ச்சலுக்கு 5-ம் வகுப்பு மாணவி பலி

Published On 2019-11-05 15:02 GMT   |   Update On 2019-11-05 15:02 GMT
பாப்பிரெட்டிப்பட்டி அருகே மர்ம காய்ச்சலுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 5-ம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
பாப்பிரெட்டிப்பட்டி:

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வீரபத்திரன் கோவில் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 42). இவரது மகள் பரணி ஸ்ரீ (வயது 11). பாப்பிரெட்டிப்பட்டி ஜீவாநகர் தொடக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள்.

இவளுக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்து வந்தது. இதற்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு தினசரி சென்று மருத்துவம் பார்த்து வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்த பரணி ஸ்ரீக்கு மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டு, காய்ச்சல் அதிகமானது. பின்னர், மீண்டும் பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை அளித்தனர்.

இதையடுத்து மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்ப முயற்சித்துக் கொண்டிருக்கும்போது திடீரென பரணி ஸ்ரீ வாந்தி எடுத்து பரிதாபமாக இறந்துவிட்டார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் கதறி அழுதனர். இச்சம்பவம் குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மர்ம காய்ச்சலால் 5-ம் வகுப்பு மாணவி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News