செய்திகள்
விபத்து

பாளையில் லாரி மோதி தொழிலாளி பலி

Published On 2021-09-15 10:33 GMT   |   Update On 2021-09-15 10:33 GMT
பாளையில் லாரி மோதி தொழிலாளி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை:

பாளை பஸ் நிலைய பகுதியை சேர்ந்தவர் பரமசிவன் (வயது65), தொழிலாளி. இவர் இன்று கே.டி.சி. நகர் நான்கு வழி சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரி அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

இதில் பலத்த காயமடைந்த பரமசிவன் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பலியானார்.

இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா மூலம் தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News