செய்திகள்
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி சிங்கப்பூர் பயணம்
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நாளை அரசு முறை பயணமாக சிங்கப்பூர் செல்கிறார். அங்கு தொழில்முனைவோரை சந்தித்து புதுவைக்கு தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுக்கிறார்.
புதுச்சேரி:
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நாளை (புதன்கிழமை) அரசு முறை பயணமாக சிங்கப்பூர் செல்கிறார்.
சிங்கப்பூரில் 4 நாட்கள் முதல்-அமைச்சர் நாராயணசாமி தங்குகிறார். அங்கு தொழில்முனைவோரை சந்தித்து புதுவைக்கு தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுக்கிறார்.
மேலும் சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியர்களையும், தமிழர்களையும் சந்தித்து பேசுகிறார். அதோடு சிங்கப்பூரில் செயல்படுத்தப்படும் சுற்றுலா திட்டங்களையும் அவர் பார்வையிடுகிறார்.
முதல்-அமைச்சர் நாராயணசாமியுடன் பிப்டிக் சேர்மன் சிவா எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் உடன் செல்கின்றனர்.
சுற்றுப் பயணத்தை முடித்து வருகிற 10-ந்தேதி நாராயணசாமி மீண்டும் புதுவை திரும்புகிறார்.
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நாளை (புதன்கிழமை) அரசு முறை பயணமாக சிங்கப்பூர் செல்கிறார்.
சிங்கப்பூரில் 4 நாட்கள் முதல்-அமைச்சர் நாராயணசாமி தங்குகிறார். அங்கு தொழில்முனைவோரை சந்தித்து புதுவைக்கு தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுக்கிறார்.
மேலும் சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியர்களையும், தமிழர்களையும் சந்தித்து பேசுகிறார். அதோடு சிங்கப்பூரில் செயல்படுத்தப்படும் சுற்றுலா திட்டங்களையும் அவர் பார்வையிடுகிறார்.
முதல்-அமைச்சர் நாராயணசாமியுடன் பிப்டிக் சேர்மன் சிவா எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் உடன் செல்கின்றனர்.
சுற்றுப் பயணத்தை முடித்து வருகிற 10-ந்தேதி நாராயணசாமி மீண்டும் புதுவை திரும்புகிறார்.