செய்திகள்
விருதுநகர் அருகே அனுமதியின்றி மண் அள்ளிய 2 பேர் கைது
அனுமதியின்றி மண் அள்ளிய 2 பேர் கைது செய்யப்பட்டனர் இதை தொடர்த்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் அருகே குருமூர்த்திநாயக்கன்பட்டியில் உள்ள ஓடையில் கிராவல் மண் அள்ளுவதாக ஆமத்தூர் கிராம நிர்வாக அதிகாரி உமா கணேசனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர் வருவாய் ஆய்வாளர் மலர்கொடி மற்றும் ஆமத்தூர் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு சென்ற போது அங்கு எவ்வித அரசுஅனுமதியும் பெறாமல் ஜே.சி.பி. எந்திரம் மூலம் ஒரு டிராக்டரில் மண் அள்ளிக்கொண்டு இருந்ததை கண்டு விசாரணை மேற்கொண்டார்.
இதனை தொடர்ந்து அவர் கொடுத்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் ஜே.சி.பி. எந்திரத்தையும், டிராக்டரையும் பறிமுதல் செய்ததோடு ஜே.சி.பி. டிரைவர் சேர்வைகாரன்பட்டியை முனீஸ் குமார் (வயது 21), டிராக்டர் டிரைவர் மத்திய சேனையை சேர்ந்த மாரிசாமி (33) மற்றும் ஜே.சி.பி. உரிமையாளர் மத்திய சேனையை சேர்ந்த கருப்பசாமி, டிராக்டர் உரிமையாளர் மத்தியசேனையை சண்முக கருப்புசாமி ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், டிரைவர்கள் முனீஸ்குமார், மாரிச்சாமியை கைது செய்தனர். மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.