வழிபாடு
மோகனூர் காந்தமலை முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

மோகனூர் காந்தமலை முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

Published On 2021-12-10 03:56 GMT   |   Update On 2021-12-10 03:56 GMT
மோகனூர், காந்தமலை முருகன் கோவிலில், பால், தயிர், இளநீர், திருமஞ்சனம், மஞ்சள், உள்பட பல்வேறு திரவியம் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது,
மோகனூர், காந்தமலை முருகன் கோவிலில், வளர்பிறை சஷ்டியையொட்டி சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெற்றது. இதையொட்டி பால், தயிர், இளநீர், திருமஞ்சனம், மஞ்சள், உள்பட பல்வேறு திரவியம் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது,

தொடர்ந்து பல்வேறு வண்ண மலர்களால் சாமி அலங்காரம் செய்து அர்ச்சனை செய்யப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சமூக இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News