ஆன்மிகம்
வடலூர் வள்ளலார் ஞானசபையில் வைகாசி மாத ஜோதி தரிசனம் யுடியூப் சேனலில் நேரலை
வடலூரில் வள்ளலார் ஞானசபையில் பக்தர்கள் வசதிக்காக இன்று இரவு வள்ளலார் தெய்வ நிலையத்துக்கு சொந்தமான யுடியூப் சேனலில் ஜோதி தரிசனம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
வடலூர் திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலைய நிர்வாக அதிகாரி கோ.சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் ஞானசபையில் மாதந்தோறும் ஜோதி தரிசனம் நடைபெறும். அந்த வகையில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறும் வைகாசி மாத ஜோதி தரிசனத்தின்போது கொரோனா பரவலை கட்டுப்படுத்த போடப்பட்ட ஊரடங்கு காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
மேலும் பக்தர்கள் வசதிக்காக இன்று இரவு 7.45 மணி முதல் 8.45 மணி வள்ளலார் தெய்வ நிலையத்துக்கு சொந்தமான யுடியூப் சேனலில் ஜோதி தரிசனம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. எனவே பக்தர்கள் https://www.youtube.com/channel/UCE ijozGGHgOZFISkQAOB93A -ல் நேரலையாக காணலாம்.
இவ்வாறு மேற்கண்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.