செய்திகள்
குருபரப்பள்ளி, சூளகிரி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்
குருபரப்பள்ளி, சூளகிரி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மின் வாரிய செயற்பொறியாளர் வேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குருபரப்பள்ளி, சூளகிரி, காமன்தொட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சூளகிரி நகரம், மாதரசனப்பள்ளி, உலகம், ஏனுசோனை, சின்னார், சாமல்பள்ளம், பீர்பள்ளி, பிக்கனப்பள்ளி, காளிங்கவரம், சிம்பில்திராடி, காமன்தொட்டி, கோனேரிப்பள்ளி, பாத்தகோட்டா, பந்தாரப்பள்ளி, குருபரப்பள்ளி, குப்பச்சிப்பாறை, எண்ணேகொள்புதூர், சிட்கோ, போலுப்பள்ளி, ஜீனூர், சின்னகொத்தூர், கங்கோஜிகொத்தூர், ஆவல்நத்தம், பதிமடுகு, வே.மாதேப்பள்ளி, வேப்பனப்பள்ளி, நல்லூர், தீர்த்தம், மணவாரனப்பள்ளி, நாச்சிகுப்பம், எப்ரி, தம்மண்டரப்பள்ளி மற்றும் சுற்றி உள்ள கிராமங்களில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.