செய்திகள்
சாலை விபத்து

ஜம்மு காஷ்மீர் - பள்ளத்தாக்கில் பயணிகள் வாகனம் கவிழ்ந்து 12 பேர் பலி

Published On 2019-11-12 11:48 GMT   |   Update On 2019-11-12 11:48 GMT
ஜம்மு காஷ்மீரில் பயணிகள் சென்ற வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 12 பேர் பரிதாபமாக பலியாகினர்.
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் டோடா மாவட்டத்தின் மர்மட் பகுதியில் பயணிகள் வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம் மதியம் 3.25 மணியளவில் அருகிலுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்தது.

இந்த விபத்தில் பயணம் செய்த 2 குழந்தைகள் உள்பட 12 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என போலீசார் தெரிவித்தனர்.
Tags:    

Similar News