செய்திகள்
தற்கொலை

அவினாசி அருகே மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2020-10-17 14:11 GMT   |   Update On 2020-10-17 14:11 GMT
அவினாசி அருகே பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
அவினாசி:

அவினாசி அருகே பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இது குறித்து அவினாசி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

அவினாசி அருகே உள்ள பெரியாயிபாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார்-வைசாலியின் மகன் ரகுபிரசாத் (வயது13). வைசாலி கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இவர் பெரியாயிபாளையத்தில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் தினக்கூலியாக வேலை பார்த்து வந்தார். ரகுபிரசாத் அங்குள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் நேற்று அவரது தாயார் வேலைக்கு சென்ற நேரத்தில் ரகுபிரசாத் வீட்டில் குளியல் அறையில் தூக்குப்போட்டுக்கொண்டான். வேலைக்கு சென்ற வைசாலி வீட்டிற்கு வந்து குளியலறையில் பார்த்தபோது ரகுபிரசாத் தூக்கில் தொங்கி உள்ளான்.

உடனே அவனை மீட்டு திருமுருகன்பூண்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி ரகுபிரசாத் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து தகவல் அறிந்த அவினாசி போலீசார் ரகுபிரசாத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

ரகுபிரசாத் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து அவினாசி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News