செய்திகள்
திருக்காட்டுப்பள்ளி அருகே விவசாயி தற்கொலை
திருக்காட்டுப்பள்ளி அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்காட்டுப்பள்ளி:
திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள விட்டலாபுரம் மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் ஞானப்பிரகாசம்(வயது66). விவசாயி. தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அவர் மருத்துவமனையில் வயிற்று வலி குணமாக சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் வயிற்று வலி குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த ஞானப்பிரகாசம் சம்பவத்தன்று எலி மருந்தை(விஷம்) தின்று மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.