செய்திகள்
சீர்காழி அருகே சாராயம் விற்ற பெண் கைது
சீர்காழி அருகே சாராயம் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீர்காழி:
சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கிராமத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த சுமதி (வயது38) சாராய விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.