ஆன்மிகம்
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவில்

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் கந்தசஷ்டி விழா நாளை தொடக்கம்

Published On 2021-11-03 05:20 GMT   |   Update On 2021-11-03 05:20 GMT
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் சூரசம்ஹாரம் நடைபெறும் 9-ந்தேதியும், திருக்கல்யாணம் நடைபெறும் 12-ந்தேதியும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் கந்த சஷ்டி விழா நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. 6-ம் திருநாளான 9-ந்தேதி மதியம் 12 மணிக்கு தாரகாசுரன் வதம் நடைபெறுகிறது. தொடர்ந்து மாலை 5 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது. மறுநாள் 10-ந் தேதி காலை 9 மணிக்கு சண்முகருக்கு சிறப்பு அபிஷேகமும், 12-ந்தேதி இரவு 8 மணிக்கு கழுகாசலமூர்த்தி-தெய்வானை திருக்கல்யாணமும் நடைபெறும். 14-ந்தேதி இரவு 7 மணிக்கு மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.

கந்தசஷ்டி விழாவில் சூரசம்ஹாரம் கோவில் உள்பிரகாரத்தில் நடைபெறுகிறது. சூரசம்ஹாரம் நடைபெறும் 9-ந்தேதியும், திருக்கல்யாணம் நடைபெறும் 12-ந்தேதியும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன், கோவில் தலைமை எழுத்தர் செண்பகராஜ் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News