செய்திகள்
கோப்புபடம்

தொழிலாளி, தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-01-22 10:40 GMT   |   Update On 2021-01-22 10:40 GMT
விழுப்புரம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:

விழுப்புரம் அருகே கீழ்முத்தாம்பாளையத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 48), கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு கொண்டார். உடனே அக்கம், பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார். இவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News