செய்திகள்
மழைநீரில் மூழ்கியுள்ள நெற்பயிர்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் 20,644 ஹெக்டேர் விளைநிலங்கள் நீரில் மூழ்கின

Published On 2021-11-23 07:08 GMT   |   Update On 2021-11-23 07:08 GMT
அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த பயிர்களும் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் மிகவும் கவலையடைந்துள்ளனர்.
விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழையினால் ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம், அருகில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்தது மட்டுமின்றி விவசாய விளைநிலங்களையும் மூழ்கடித்தது. அதுமட்டுமின்றி பல ஏரிகள் நிரம்பி அதிலிருந்து வெளியேறிய உபரிநீரும் விவசாய விளைநிலங்களுக்குள் புகுந்தது. இதனால் அங்கு சாகுபடி செய்யப்பட்டிருந்த பல ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்கள் மூழ்கியது. ஒருசில நிலங்களில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த பயிர்களும் தண்ணீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் மிகவும் கவலையடைந்துள்ளனர்.

தற்போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மாவட்டம் முழுவதும் நெல் பயிர் செய்யப்பட்டிருந்த 18,487 ஹெக்டேர் விளைநிலங்களும், சிறுதானியங்கள் பயிர் செய்திருந்த 61 ஹெக்டேர் விளைநிலங்களும், பருப்பு வகைகள் பயிர் செய்திருந்த 1,601 ஹெக்டேர் விளைநிலங்களும், பருத்தி பயிர் செய்திருந்த 41 ஹெக்டேர் விளைநிலங்களும், கரும்பு பயிர் செய்திருந்த 417 ஹெக்டேர் விளைநிலங்களும், எள் பயிர் செய்திருந்த 37 ஹெக்டேர் விளைநிலங்களும் என மொத்தம் 20,644 ஹெக்டேர் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

இதன் சேத விவரங்களை கணக்கிட்டு மதிப்பீடு நிர்ணயிக்கும் பணியில் வருவாய்த்துறையினரும் வேளாண் துறையினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Tags:    

Similar News