செய்திகள்
கைது

மயிலாடுதுறை அருகே 350 லிட்டர் சாராயம் பறிமுதல்- ஒருவர் கைது

Published On 2021-06-06 15:08 GMT   |   Update On 2021-06-06 15:08 GMT
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் திருவாவடுதுறை, மாம்புள்ளி கிராமத்தில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு தகவல் வந்தது.
மயிலாடுதுறை:

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் திருவாவடுதுறை, மாம்புள்ளி கிராமத்தில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு தகவல் வந்தது. அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மாம்புள்ளி கீழத்தெருவை சேர்ந்த முருகன் (வயது 38) என்பவரின் வீட்டை சோதனையிட்டனர். அப்போது வீட்டில் 10 கேன்களில் 350 லிட்டர் சாராயம் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக முருகனை கைது செய்து, தப்பி ஓடிய முருகனின் சகோதரர் ராமலிங்கம் என்பவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News