செய்திகள்
நகை திருட்டு

டாஸ்மாக் நிறுவன ஊழியர் வீட்டில் 22 பவுன் நகை திருட்டு

Published On 2020-10-22 03:18 GMT   |   Update On 2020-10-22 03:18 GMT
டாஸ்மாக் நிறுவன ஊழியர் வீட்டில் 22 பவுன் நகை திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் சின்னையன் நகரைச் சேர்ந்தவர் பிரகாஷ். டாஸ்மாக் நிறுவனத்தில் காசாளராக பணிபுரிந்து வருகிறார். இவரும், இவரது மனைவியும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தனது உறவினர் வீட்டு திருமணத்துக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 22 பவுன் தங்க நகை, வெள்ளி பொருட்கள், ரூ.10 ஆயிரத்தை மர்மநபர் திருடிச்சென்று இருப்பது தெரிந்தது.

இதுபற்றி காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் இரவு நேரத்தில் தெருவில் நடந்து வரும் கொள்ளையன், தெரு நாய்களை துரத்துவதற்காக கற்களை எடுத்து வீசியபடி சகஜமாக செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News