தொழில்நுட்பம்
ஒப்போ

விரைவில் இந்தியா வரும் ஒப்போ ஸ்மார்ட்போன்

Published On 2020-08-20 12:32 GMT   |   Update On 2020-08-20 12:32 GMT
ஒப்போ நிறுவனத்தின் புதிய எஃப்17 ப்ரோ ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.


ஒப்போ நிறுவனத்தின் புதிய எஃப் சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஒப்போ எஃப்17 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கான டீசரையும் வெளியிட்டு உள்ளது. 

புதிய எஃப்17 ப்ரோ டீசரின் படி இந்த ஸ்மார்ட்போன் 7.48 எம்எம் தடிமனகாவும், இதன் எடை 164 கிராம் என தெரியவந்துள்ளது. புதிய ஸ்மார்ட்போன் இந்த ஆண்டின் மிகவும் மெல்லிய ஸ்மார்ட்போனாக இருக்கும் என ஒப்போ தெரிவித்து இருக்கிறது.



மேலும் டீசரின் படி இந்த ஸ்மார்ட்போனில் வால்யூம் ராக்கர் பட்டன்கள், சிம் டிரே உள்ளிட்டவை இடது புறத்திலும், ஸ்மார்ட்போனின் பின்புறம் கேமரா பம்ப் வழங்கப்படுகிறது. புதிய ஒப்போ எஃப்17 ப்ரோ வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. 

முன்னதாக ஒப்போ நிறுவனம் எஃப்15 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதில் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வேரியண்ட் புதிய பிளேசிங் புளூ நிறத்தில் கிடைக்கிறது. தற்சமயம் எஃப்15 வெளியாகி ஆறு மாதங்களுக்கு பின் புதிய ஸ்மார்ட்போன் வெளியீடு நடைபெற இருக்கிறது.
Tags:    

Similar News