செய்திகள்
கைது

கரூர் அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது

Published On 2021-09-25 10:43 GMT   |   Update On 2021-09-25 10:43 GMT
கரூர் அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:

கரூர் வெங்கமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயக்குமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கரூர் பாரதிதாசன் நகர் பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட மாயவன் (வயது 40), வினோத்குமார் (36), தினகரன் (27) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News