செய்திகள்
சொகுசு காரில் புகையிலை பொருட்கள் கடத்தல்- 2 பேர் கைது
மதுரையில் சொகுசு காரில் புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை:
மதுரை மாநகரில் புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதன் அடிப்படையில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டார்.
மாநகர சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் தங்கதுரை ஆலோசனை பேரில், மாட்டுதாவணி போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுராதா தலைமையில் போலீசார் வளர் நகர்- அம்பலக்காரன்பட்டி சந்திப்பு பகுதியில் வாகன சோதனை நடத்தினர்.
அங்கு சொகுசு கார் வந்தது. அதில் 2 பேர் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாகனத்தை சோதனை செய்தனர். அதில் 109 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் 2 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் கீழசந்தைப்பேட்டை அலாவுதீன் மகன் அக்பர் (23), முனிச்சாலை கான்பாளையம் தெருவைச் சேர்ந்த ஆனந்த குரு (30) என்பது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாநகரில் புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதன் அடிப்படையில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டார்.
மாநகர சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் தங்கதுரை ஆலோசனை பேரில், மாட்டுதாவணி போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுராதா தலைமையில் போலீசார் வளர் நகர்- அம்பலக்காரன்பட்டி சந்திப்பு பகுதியில் வாகன சோதனை நடத்தினர்.
அங்கு சொகுசு கார் வந்தது. அதில் 2 பேர் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாகனத்தை சோதனை செய்தனர். அதில் 109 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் 2 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் கீழசந்தைப்பேட்டை அலாவுதீன் மகன் அக்பர் (23), முனிச்சாலை கான்பாளையம் தெருவைச் சேர்ந்த ஆனந்த குரு (30) என்பது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.