செய்திகள்
அரவிந்த்

தென்காசியில் பஸ் மோதி என்ஜினீயர் பலி

Published On 2021-01-11 12:01 GMT   |   Update On 2021-01-11 12:01 GMT
தென்காசியில் அரசு பஸ் மோதி என்ஜினீயர் பலியானா சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி:

தென்காசி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் செல்லத்துரை. வக்கீல். இவருக்கு 2 மகன்கள். மூத்த மகன் மதன். இவரது 2-வது மகன் நரேந்திர குமார் என்ற அரவிந்த் (வயது 28).

இவர், கம்ப்யூட்டர் அறிவியலில் டிப்ளமோ என்ஜினீயரிங் முடித்து விட்டு, வேலை தேடிக் கொண்டிருந்தார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் சென்று கொண்டிருந்தார்.

வேளாண் இணை இயக்குனர் அலுவலகம் அருகே சென்றபோது எதிரே வந்த அரசு பஸ் மோதியதில், மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்ட அரவிந்த் பலத்த காயம் அடைந்தார். சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இறந்து போன அரவிந்தின் மூத்த சகோதரர் மதன், கடந்த 2015-ம் ஆண்டு இதேபோன்று மோட்டார்சைக்கிள் விபத்தில் பரிதாபமாக பலியானார். தற்போது அரவிந்தும் விபத்தில் இறந்தது குடும்பத்தினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இந்த விபத்து குறித்து தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News