செய்திகள்
தடுப்பூசி முகாம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்

Published On 2021-06-23 17:35 GMT   |   Update On 2021-06-23 17:35 GMT
கன்னியாகுமரியை அடுத்த கோவளம் புனித அந்தோணியார் பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
கன்னியாகுமரி:

கன்னியாகுமரியை அடுத்த கோவளம் புனித அந்தோணியார் பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இதை அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் தாமரைபாரதி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல அதிபர் ஆண்டனி அல் காந்தர், அகஸ்தீஸ்வரம் வட்டார மருத்துவ அலுவலர் சக்தி, பங்கு பேரவை தலைவர் நாஞ்சில் மைக்கேல், இணை பங்குதந்தை லெனின், ஸ்டீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராஜா, அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் பொதுமக்கள் மற்றும் மாற்று திறனாளிகள் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
Tags:    

Similar News